அளவிற்கு மீறி பேதையானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதை நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க
எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கட்டி சளி, இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பித்தத்தைப்போக்கும். தலைவலியைத்தீர்க்கும், மலச் சிக்கலைப்போக்கும், தொண்டைவலியைப்போக்கும், வாந்தியை நிறுத்தும், காலாராக்கிருமியை ஒழிக்கும், பல் நோய்களைக்குணப்படுத்தும், டான்சில் வராமல் தடுக்கும்,விஷத்தைமுறிக்கும், தேள் கடிக்கு உதவும், வாய்ப்புண்ணை ஆற்றும்,மஞ்சள் காமாலையை நீக்கும், வீக்கத்தைக்குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றுக்கு நிவாரணமாகும், யானைக்கால் வியாதியைக்குணப்படுத்தும்.
புற்று நோயாளர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கை எலுமிச்சம்பழம் தடுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment