தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெந்தயக்கீரை - 1/2 கப்
- அரிந்த வெங்காயம் - 1
- தயிர் - 1/4 கப்
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
- தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
- சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
செய்முறை :
- வெங்காயத்தை எண்ணெயில் பிரவுன் கலரில் பொரித்து ஆறவைத்து தயிருடன் விழுதாக அரைக்கவும்.
- வெந்தயக்கீரையை உப்பு+சர்க்கரை கலந்த நீரில் 15 நிமிடம் வைத்து நன்கு அலசி வைக்கவும்.
- வெந்தயக்கீரையை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.பின் சீரகப்பொடி+எல்லா தூள் வகைகள் சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.
- வெந்த பின் பொரித்த வெந்தயக்கீரை+கரம் மசாலா, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கிரேவி பதத்திற்க்கு வரும் போது இறக்கவும்.
சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்
0 கருத்துகள்:
Post a Comment