சேமியாவில் கிச்சடி, உப்புமா, பாயசம், இட்லி என்று பல வகை சமையல் செய்யலாம். இந்த சேமியா பருப்பு உசிலியில் பருப்புகள் அடங்கியிருப்பதால் ரொம்பவும் சத்தான உசிலி இது.
தேவையானவை:
- துவரம்பருப்பு- 1 கப்
- கடலைப்பருப்பு- 1 கப்
- மிளகாய் வற்றல்-6
- பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
- சேமியா- 1 கப்
- தேவையான உப்பு
- நெய்- 2 மேசைக்கரண்டி
- எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
- கடுகு- 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
- பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
- கறிவேப்பிலை- 20 இலைகள்
- மெல்லியதாக அரிந்த வெங்காயம்- 1 கப்
- பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
- [தேவையானால்]தேங்காய்த்துருவல்- 1 கப்
- மிளகாய்களை விதைகள் நீக்கி, பருப்பு வகைகளுடன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- தண்ணீரை வடித்து போதுமான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- இத்துடன் சேமியா, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- இட்லித்தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
- வெளியே எடுத்து ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.
- கடுகைப்போட்டு அவை வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வதக்கவும்.
- சிறிது சிவந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வேக வைக்கவும்.
- எண்ணெய் மேலே தெளிந்து வந்ததும் உதிர்த்திருப்பவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் அனைத்தும் சேரும்படி கிளறவும்.
- அடுப்பை அணைத்து தேங்காய்த்துருவல் வேண்டுமானால் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
0 கருத்துகள்:
Post a Comment