RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

சேமியா பருப்பு உசிலி

சேமியாவில் கிச்சடி, உப்புமா, பாயசம், இட்லி என்று பல வகை சமையல் செய்யலாம். இந்த சேமியா பருப்பு உசிலியில் பருப்புகள் அடங்கியிருப்பதால் ரொம்பவும் சத்தான உசிலி இது. 



தேவையானவை:

  • துவரம்பருப்பு- 1 கப்
  • கடலைப்பருப்பு- 1 கப்
  • மிளகாய் வற்றல்-6
  • பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
  • சேமியா- 1 கப்
  • தேவையான உப்பு
  • நெய்- 2 மேசைக்கரண்டி
  • எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
  • கடுகு- 1 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • கறிவேப்பிலை- 20 இலைகள்
  • மெல்லியதாக அரிந்த வெங்காயம்- 1 கப்
  • பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
  • [தேவையானால்]தேங்காய்த்துருவல்- 1 கப்
செய்முறை
  • மிளகாய்களை விதைகள் நீக்கி, பருப்பு வகைகளுடன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தண்ணீரை வடித்து போதுமான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • இத்துடன் சேமியா, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  • இட்லித்தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
  • வெளியே எடுத்து ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும். 
  • வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.
  • கடுகைப்போட்டு அவை வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வதக்கவும்.
  • சிறிது சிவந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வேக வைக்கவும். 
  • எண்ணெய் மேலே தெளிந்து வந்ததும் உதிர்த்திருப்பவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் அனைத்தும் சேரும்படி கிளறவும். 
  • அடுப்பை அணைத்து தேங்காய்த்துருவல் வேண்டுமானால் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சேமியா பருப்பு உசிலி தயார்!! 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

Post a Comment

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►