தேவையான பொருள்கள் :
- காரா பூந்தி
- ஓமப் பொடி
- காராச் சேவு
- ரிப்பன் பக்கோடா
- நிலக்கடலை
- பொட்டுக் கடலை
- முந்திரிப் பருப்பு
- பாதாம் பருப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- நெய்
- மிளகாய்த் தூள், உப்பு (விரும்பினால்)
செய்முறை :
- ஓமப்பொடி, காராச் சேவு, ரிப்பன் பக்கோடா இவற்றை தேவையான அளவு எடுத்து ஒடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- காராபூந்தியையும் சேர்த்துக் கொள்ளவும்.
- முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- நிலக்கடலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும் அல்லது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- பாதாம் பருப்பை அப்படியே அல்லது ஊறவைத்து உலர்த்தி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- பொட்டுக் கடலையை சிறிது சிறிதாகப் போட்டு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- கறிவேப்பிலையையும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- எல்லாவற்றையும் கைபடாமல் ஒரு கரண்டியால் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.
மேலே உள்ள பட்சணங்களில் சேர்த்துள்ள காரமே(ஓமம், மிளகு, மிளகாய்த் தூள்) போதுமென்றால் அப்படியே விட்டு விடலாம். மேலும் காரம் வேண்டுமென்று நினைப்பவர்கள்– சிறிது நெய்யை உருக்கி, அதில் மிளகாய்த் தூள், உப்பைக் குழைத்துக் கொள்ளவும். நிலக்கடலை, பாதாம், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பை மட்டும் கலந்து அதனோடு இதனையும் சேர்த்துப் பிசிறி, மொத்த மிக்ஸரில் இந்தக் கலவையைக்கலந்துவிட்டால் சீராகக் கலந்துவிடும். தனித்தனியாக இவைகளை மிக்ஸரில் கலக்கப் பார்த்தால் சரியாக வராது.
0 கருத்துகள்:
Post a Comment